கேள்வி கேட்கத்தான் நினைக்கிறேன்.. ஆனால்.. லோக்சபாவில் ராகுல் காந்தி ஆவேசம்
Recommended Video
டெல்லி: நான் மத்திய அரசை, கேள்வி கேட்க விரும்புகிறேன், ஆனால் கேட்காமல் இருக்கிறேன், ஏனெனில் இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி லோக்சபாவில், தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் நிலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பியதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே லோக்சபாவில், பேசிய ராகுல் காந்தி, நான் இந்த சபையில் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன், ஆனால் மகாராஷ்டிராவில் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது. எனவே, நான் கேள்வி கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
காங்கிரஸ், சிபிஐ (எம்) மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா பிரச்சினை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரியுள்ளன. லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கொறடா, சுரேஷ் ஆகியோர் மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச நோட்டீஸ் கொடுத்தனர்.
महाराष्ट्र में लोकतंत्र की हत्या हुई : श्री @RahulGandhi pic.twitter.com/wJXGjZ9NsG
— Congress (@INCIndia) November 25, 2019
குளிர்கால அமர்வின் ஆறாவது நாளான இன்று. மத்திய அரசு ஒரு முக்கியமான நிதி மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, வருமான வரிச் சட்டம் 1961 ஐ திருத்துவதற்கான மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்த கூடும். இ-சிகரெட் தடை குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா நிலவரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காட்டி வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications