2018-2019 நிதியாண்டு மிக மோசம்.. சரிந்தது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.. அதிர்ச்சி அறிக்கை!
கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. நிலையான முதலீடு இல்லாததாலும், மக்களின் தனிநபர் நுகர்வு குறைவாக இருந்ததாலும், இந்த பின்னடைவை இந்தியா சந்தித்து இருக்கிறது.
பிரதமர் மோடி, இந்தியா வேகமாக வளரும் நாடு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்றும் அவர் கணித்து இருந்தார். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

மோசமான சரிவு
கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தை வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டதை போலவே வருவாயும், வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

எவ்வளவு குறைந்தது
அதன்படி 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 7 சதவிகித பொருளாதார வளர்ச்சிதான் கடந்த ஐந்து வருடத்தில் மிக மோசமான வளர்ச்சி ஆகும். இதை மீண்டும் தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்
இதற்கு காரணங்கள் நிறைய தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நிலையான முதலீடு இல்லாததால் வர்த்தக துறையில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை. அதேபோல் மக்களின் தனிநபர் நுகர்வு குறைவாக இருந்ததாலும் பொதுவாம் நிலையான வருமானம் கிடைக்கவில்லை. இது உற்பத்தியை பாதித்து வளர்ச்சியை பாதித்துள்ளது. இதனால்தான் இந்த பின்னடைவை இந்தியா சந்தித்து உள்ளது.

தீர்வு என்ன
கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த பணப்புழக்கம், சரிந்து இருக்கும் பொருளாதார வளர்ச்சியை கொஞ்சம் சரி செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications