8 ஆண்டுகளாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில்.. முடிவுக்கு வந்தது மங்கள்யான் விண்கலத்தின் பயணம்!
டெல்லி: இந்திய விண்வெளித்துறையில் மைல் கல்லாக கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய்கிரக சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த மங்கள்யான் விண்கலம் தமது பயணத்தை நிறைவுசெய்துவிட்டது.
இஸ்ரோ எனப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த 2013-ல் விண்வெளித்துறையின் உச்சத்தை தொட்டது. ரூ450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. மங்கள்யான் விண்கலத்தை பிஎஸ்எல்வி-25 ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. இதில் 15 கிலோ எடை கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது விண்கலம் என்ற பெருமைக்குரியது நமது மங்கள்யான்.
மங்கள்யான் விண்கலமானது 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலம் பல்வேறு தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வந்தது. இதனால் மங்கள்யானுக்கு அடுத்தடுத்த விண்கலத்தை அனுப்புகிற முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் படம் எடுத்து அனுப்பி இருந்தது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருப்பது போபோஸ். இந்த போபோஸ், விண்கற்களால் உருவானது; இதில் தண்ணீர் இருக்கிறது; விண்கற்கள் மோதலில் இருந்து இது உருவாகி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.
இதனிடையே மங்கள்யான் விண்கலத்துடனான தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் மங்கள்யான் விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளும் இல்லாமல் போய்விட்டது.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு தகவல்களை அனுப்பி வந்த மங்கள்யானின் விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ நிறுவனம் விரைவில் வெளியிடும் என்பது எதிர்பார்ப்பு.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications