"இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழலாம்".. ஆனால்.. ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் 'பரபர' பேச்சு
டெல்லி: இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் முஸ்லிம்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
"அதே சமயத்தில், தங்கள் பெருமைகள், வரலாறுகள் குறித்து முஸ்லிம்கள் தேவையில்லாமல் தம்பட்டம் அடிக்கக் கூடாது" என்றும் மோகன் பாகவத் கூறினார்.
முஸ்லிம்கள் குறித்த மோகன் பாகவத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.

வியூகத்தை மாற்றிய மோகன் பாகவத்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தது முதலாக, சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இந்த பேச்சுகள் வைரலாகி சில இடங்களில் மத ரீதியிலான மோதலுக்கும் வழிவகுத்தன. இதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது வியூகத்தை மாற்றினார். முஸ்லிம்களை தரக்குறைவாக பேச வேண்டாம் என வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். பல இடங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் என்ற ரீதியிலும் அவரது பேச்சு இருந்தது. இதனால் மோகன் பாகவத்துடன் முஸ்லிம் தலைவர்கள் பலரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

"முஸ்லிம்கள் அச்சமின்றி வாழலாம்"
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் முஸ்லிம்களை குறிப்பிட்டு சில அறிவுரைகளை கூறியிருந்தார். அவரது உரையின் ஒரு பகுதி: நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து ராஷ்டிரமாகவே இந்தியா இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்தியாவில் முஸ்லிம்களும் அச்சமின்றி வாழலாம். அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஆனால், சில விஷயங்களை முஸ்லிம்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

"தம்பட்டம் அடிக்க வேண்டாம்"
தேவையில்லாமல் தங்களின் பெருமைகள் குறித்தும், வரலாறு குறித்தும் முஸ்லிம்கள் தம்பட்டம் அடிக்கக் கூடாது. உதாரணமாக, "நாமே உயர்ந்தவர்கள்", "ஒருகாலத்தில் இந்தியாவை நாம் ஆண்டோம்; மீண்டும் நாம் ஆளுவோம், நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். அதனால்தான் நம்மால் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை" என்பன போன்ற பேச்சுகளை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.

"இதுதான் இந்துத்துவா"
இந்த நேரத்தில் இந்துக்களும் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்து என்பதே நமது அடையாளம்; நமது தேசம்; நமது நாகரீக பண்பு. அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்றுதான் நமது நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. "நாங்கள்தான் சரி; மற்றவர்கள் எல்லாம் தவறு" என நாம் சொல்பவர்கள் கிடையாது. மாறாக, "எங்கள் இடத்தில் நாங்கள் சரி. உங்கள் இடத்தில் நீங்கள் சரி என அனுசரித்து செல்பவர்கள் நாம். இதுதான் இந்துத்துவா. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications