என்னது தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவில் யுத்த பயிற்சியா? அடங்காத பரபரப்பு
டெல்லி: தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவில் யுத்த பயிற்சி வழங்கப்படும் என வெளியான செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றினர். தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த முறை சர்வதேச நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிர்வாகத்தில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடருகிறது. தாலிபான்களை எதிர்த்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச சமூகத்தில் அதிருப்தி நிலவவும் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றன. அண்மையில் , ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கான வெளியுறவு அமைச்சக பிரதிநிதி ஜெ.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கான் சென்றது. இக்குழுவின தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரானில் அகதிகளாக இருக்கும் ஆப்கானியர்களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது.
இதனிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் திறக்கபடுவது குறித்தும் இந்தியாவில் தாலிபான்களின் ஆப்கான் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் பேச்சுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இத்தகைய தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய முதலீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நெருக்கடியில் மத்திய அரசு இருக்கிறது என்கின்றனர் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications