கொரோனா தடுப்பு மருந்து.. இந்தியாதான் உலகிற்கே உதவ போகிறது பாருங்கள்.. அடித்து சொல்லும் பில் கேட்ஸ்!
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகில் இந்தியாதான் முக்கிய பங்கு வகிக்க போகிறது என்றும், உலகிற்கே இந்தியாதான் இந்த மருந்தை விற்பனை செய்ய போகிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவும் கோவாக்சின் உட்பட இரண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்கி தற்போது மனித சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது.
அதிலும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது இறுதிக்கட்ட மருந்து சோதனையில் இருக்கிறது. ஆகஸ்ட் இறுதியில் இது பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனும் இதற்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

பில் கேட்ஸ் பேட்டி
இந்த நிலையில் பில் கேட்ஸ் இது தொடர்பாக முக்கியமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவை புகழ்ந்து அவர் முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உலகம் முழுக்க அனைத்து நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க முடியும். இந்தியாவில் இதற்கான வசதிகள் உள்ளது. மருந்து உற்பத்திக்காக இந்தியா மிகப்பெரிய விஷயங்களை செய்துள்ளது.

இந்தியா செய்தது
இந்தியாவில் ஏற்கனவே நிறைய தடுப்பூசிகள், மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு மருந்தையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவின் மனித வளம் இதற்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள், உற்பத்தி மையங்கள் இருக்கிறது. இங்கு எளிதாக கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க முடியும்.

அதிகமாக இந்தியாவில்
இந்தியாவில் இருந்துதான் தற்போது உலக அளவில் அதிக மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் நிறுவனம்தான் உலகிலேயே மிகப்பெரிய மருந்து நிறுவனம் ஆகும். பாரத் பயோ டேக், பயோ இ போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது . அவர்கள்தான் கொரோனா வைரஸ் மருந்து தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

மற்ற நோய்களை
மற்ற நோய்களை குணப்படுத்த இவர்களிடம் பெரிய அளவில் மருந்துகள் உள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உலகிற்கே தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். இந்தியாவில் இருக்கும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதற்கான முக்கியமான பணிகளை செய்து வருகிறது. இவர்களிடம் நவீன ஆராய்ச்சி மையங்கள், அமைப்புகள் உள்ளது .

கொரோனா மையம்
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் இந்தியா இதில் வெறும் தொடக்கத்தில்தான் இருக்கிறது. இந்தியா கொரோனாவிற்கு எதிராக சிறப்பான பணிகளை செய்து இருக்கிறது. இந்தியா மிகப்பெரிய நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆனாலும் கொரோனா பரவல் நினைத்ததை விட குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கிறது.

இந்தியாவிற்கு எல்லாம் தெரியும்
கடந்த 10 வருடங்களாக இந்தியாதான் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அதனால் இந்தியாவிற்கு இப்போது என்ன தேவை, எங்கே குறைபாடு உள்ளது , கொரோனாவை எப்படி தடுப்பது என்று தெரியும். இந்தியாவிற்கு உதவ நாங்களும் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கு தேவைப்பட்டால்பயிற்சிகள் , உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம், பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications