தட்டாமல் கிடைத்த முதல்வர் பதவி.. அசல்ட்டா தூக்கிப் போட்ட அம்பிகா சோனி.. இந்திராவின் 'பிரியதர்ஷினி'
டெல்லி: அரசியல்வாதிகள் எதை எதையோ செய்தாவது முதல்வர் பதவியை கைப்பற்றுவது என்பதை கனவாக கொண்டிருப்பவர்கள்.. ஆனால் நீங்கதான் முதல்வர் என்று கூறியபின்னரும் அதெல்லாம் எனக்கு வேண்டாம் என மறுப்பவரை இன்றைய அரசியலில் காண்பது அரிதாகவே இருக்கும். இந்த அரிதான அரசியல்வாதிகள் பட்டியலில் இணைந்திருப்பவர் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி.
பிளவுபடாத இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர் அம்பிகா சோனி. ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்தார் அம்பிகா சோனியின் அப்பா. 1947-ல் நாடு பிரிவினையை சந்தித்த போது அமிர்தசரஸ் ஆட்சியராகவும் அவர் பணிபுரிந்தார். அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து செயல்பட்டார் அம்பிகா சோனியின் தந்தை Nakul Sen Wadhwa.
நேரு குடும்பத்துடன் அன்று தொடங்கிய உறவு இன்று வரை நீடிக்கிறது. அம்பிகா சோனியின் கணவர் வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றியவர். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட தருணம்.. அப்போது இந்திரா காந்தி அம்மையாரால் நீ கண்டிப்பாக அரசியலுக்கு வரனும் என கட்டளையிடப்பட்டு அழைத்துவரப்பட்டவர் அம்பிகா சோனி.

சஞ்சய் காந்தியுடன் வலது கரம்
இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த 1975-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார் அம்பிகா சோனி. அப்போது அவருக்கு வயது 33. இந்திரா காந்தியின் நிழல் அரசாங்கத்தை நடத்திய சஞ்சய் காந்திக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் அம்பிகா சோனி. அப்போதே 1976-ல் ராஜ்யசபா எம்.பியானார். பின்னர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக என காங்கிரஸ் அதிக உயரம் தொட்ட பெண்களில் அம்பிகா சோனி முக்கியமானவர்.

தொடரும் குடும்ப உறவு
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பலமுறை ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். சஞ்சய் காந்தி மறைந்த போதும், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போதும் கூட நேரு குடும்பத்துடனான உறவை அம்பிகா சோனி துண்டித்துக் கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என இன்றளவும் இந்த குடும்ப உறவு தொடருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளில் மத்திய அமைச்சர் பதவி வகித்தார். 2017-ல் உடல்நிலையை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் முதல்வர் பதவி- நிராகரிப்பு
தற்போது உட்கட்சி பூசலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பஞ்சாப் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வர அம்பிகா சோனியை முதல்வராக்க சோனியாவும் ராகுல் காந்தியும் முடிவெடுத்தனர். ஆனால் பஞ்சாப் மக்களின் உணர்வுகளை மதித்து தமக்கு தரப்பட்ட முதல்வர் பதவியை நிராகரித்துவிட்டார் அம்பிகா சோனி. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமருவதே மிகவும் சரியானது என்கிற தெளிவான புரிதலுடன் முதல்வர் பதவி எனும் அரியாசனத்தை அசால்ட்டாக தூக்கிப் போட்டுவிட்டார் அம்பிகா சோனி.

இதுதான் காரணமா?
இருந்தபோதும் 6 மாதத்தில் முதல்வர் பதவி காலம் முடிவுக்கு வந்துவிடும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெல்லுமா என்பதும் உறுதியாக தெரியாது. இந்த காரணங்களுக்காகவும் அம்பிகா சோனி முதல்வர் பதவியை வேண்டாம் என கூறியிருக்கலாம் என்கின்றனர் ஒருசிலர். ஒருநாளேனும் முதல்வர் பதவி கிடைக்காத என ஏங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தம்மைப் போலவே சற்றே உயர்ந்தே நிற்கிறார் அம்பிகா சோனி எனும் இந்திரா காந்தி அம்மையார் பிரியத்துக்குரியவர் அல்லது இந்திராவின் பிரியதர்ஷினி!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications