2024 இறுதியில் ஆளில்லா பெண் ரோபோ வியோம்மித்ராவை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ- அமைச்சர் ஜிதேந்திரசிங்
டெல்லி: இஸ்ரோ இந்த ஆண்டு பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ "வியோம்மித்ரா" வை விண்வெளிக்கு அனுப்பும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் "ககன்யான்" திட்டத்துக்கு முன்னதாக பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ "வியோம்மித்ரா" இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும்.

ஆளில்லா விண்வெளி விமானமான "வியோம்மித்ரா"-வை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்கள் செல்லும் "ககன்யான்" திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2025-ல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. "வியோம்மித்ரா" என்பது விண்வெளி என்றும் "மித்ரா" என்பது நண்பர் என்றும் பொருள். இரண்டு சமஸ்கிருத சொற்களிலிருந்து பெறப்பட்ட பெயர் இது. ந்த பெண் தோற்றம் கொண்ட ரோபோ, விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது. இந்த ரோபோவால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
"வியோம்மித்ரா" என்றால் என்ன?: சமஸ்கிருதத்தில் வியோம் என்பது சொர்க்கம் என்பதைக் குறிக்கும். மித்ரா என்பது நண்பரைக் குறிப்பிடுவது. விண்கலங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, விண்வெளி வீரர்களுடன் உரையாடுவது உள்ளிட பணிகளை வியோம்மித்ரா மேற்கொள்ளும். ஆளில்லா விண்வெளி திட்டத்தில் சூழலியல் பயன்பாட்டு அமைப்புகளை சோதனை செய்ய வியோம்மித்ரா பயன்படுத்தப்படும் என்கிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன்.












Click it and Unblock the Notifications