தேதி குறித்த இஸ்ரோ.. விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்போகும் இந்தியா.. திரும்பும் உலக நாடுகள்
டெல்லி: ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், விண்வெளியில் வரும் 2028ம் ஆண்டு ஆய்வு மையத்தை இந்தியா அமைக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இந்தியாவின் சார்பில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விண்வெளிக்கு செல்லும் வீரர்களையும் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டில் விண்வெளியில் இந்தியா தனக்கென சொந்தமாக ஆய்வு மையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்த ஆய்வு மையம் 'பாரதிய அந்தரிஷ்' என்கிற பெயரில் அழைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி: நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இப்படி இருக்கையில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆண்டு இங்கு தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்திருந்தது. சர்வதேச நாடுகளும் இந்த வெற்றிக்காக இந்தியாவை வெகுவாக பாராட்டியிருந்தன.
ஆதித்யா எல்1: சந்திரயான் வெற்றியை தொடர்ந்து ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னர் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இப்படியான விண்கலனை ஏவியிருந்தது. ஆனால், முதன் முறையாக இந்தியா இப்படிப்பட்ட விண்கலத்தை ஏவியிருப்பது உலக நாடுகளின் கவனத்தையை தன் பக்கம் திருப்பியிருந்தது.
எக்ஸ்போசாட்: சந்திரயான், ஆதித்யாவை தொடர்ந்து கருந்துளைகளை ஆய்வு செய்ய இந்தியா எக்ஸ்போசாட் என்றும் செயற்கைக்கோளை அனுப்பியது. விண்வெளி துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் நாடுகளே கருந்துளை குறித்து ஆய்வு செய்ய திணறி வரும் நிலையில், இந்தியா இதற்காக ஒரு செயற்கைக்கோளை அனுப்பியிருந்தது, மற்ற நாடுகளுக்கிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் வரும் 2028ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications