Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நோ சான்ஸ்.." சந்திரயான் 3 ரோவரை எழுப்ப முடியுமா.. வந்து விழுந்த கேள்வி.. Ex இஸ்ரோ தலைவர் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 ரோவரை மீண்டும் எழுப்ப முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நூற்றாண்டில் விண்வெளி துறையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தான் போட்டி நிலவியது. ஆனால், இப்போது இந்தியாவும் விண்வெளி துறையில் தொடர்ந்து பல சாதனைகளைச் செய்து வருகிறது.

ISRO Ex-Chief says that there is no chance for Revival Of Chandrayaan-3 Lander, Rover

குறைந்த செலவில் உலகமே வியக்கும் வகையில் இஸ்ரோ தொடர்ச்சியாக இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்தான் நிலவு குறித்த ஆய்வுகளுக்கு இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது.

தென் துருவம்: சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற பெயரையும் அது பெற்றது. நிலவில் பல்வேறு இடங்களுக்கு சென்ற சந்திரயானின் ரோவர் பல கட்ட ஆய்வுகளைச் செய்தது. அங்கு மொத்தம் 14 நாட்களுக்கு நிலவில் சந்திரயான் ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் அதன் இரவு காலம் வந்ததால் அது ஸ்லீப் மோடிற்கு சென்றது.

தொடர்ந்து கடந்த செப். இறுதியில் ரோவரை எழுப்பும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அது வெற்றிகரமாக இருக்கவில்லை. இருப்பினும், ரோவரை எழுப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கும் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போதைய சூழலில் சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப முடியும் என்று நம்பிக்கை இல்லை என்று ஆராய்ச்சியாளர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

நோ சான்ஸ்: இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இல்லை, அவ்வளவுதான்.. ரோவர் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை. ரோவர் கருவியால் புத்துயிர் பெற முடியுமானால் அது ஏற்கனவே நடந்திருக்க வேண்டும். தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆக. 23ஆம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய 4ஆவது நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.

முழு வெற்றி: சந்திரயான் 3 ரோவரை எழுப்ப முடியவில்லை என்றாலும் கூட.. அது தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பதே உண்மை. சந்திரயான்-3 சாட்டிலைட்டிற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. முதலில் சந்திரன் மேற்பரப்பில் பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டும். அடுத்து அங்கே ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் இஸ்ரோ சிறப்பாகவே செய்துள்ளது.

அடுத்த திட்டம்: தொடர்ந்து சந்திரயான் 3 செய்த சாதனைகள் குறித்துப் பேசிய இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார், "இதில் நாம் சாதித்த முக்கிய விஷயம்.. வேறு யாரும் செல்லாத ஒரு பகுதியில் (தென் துருவம்) வெற்றிகரமாக அடைந்து.. அங்கிருந்து முக்கிய டேட்டாக்களை எடுத்துள்ளோம். அங்கு நமக்கு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த குறிப்பிட்ட பகுதியின் தன்மை என்ன என்பது குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அடுத்து நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் முயற்சியை இஸ்ரோ செய்யலாம். இது எப்போது மேற்கொள்ளப்படும் என எனக்குத் தெரியாது.. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயமாக இதுவே பிரதான திட்டமாக இருக்கும். நிலவில் நம்மால் வெற்றிகரமாகத் தரையிறங்க முடிகிறது என்றால் நிச்சயம் அங்கிருந்து மாதிரிகளையும் சேகரித்து வர முடியும். இதை நோக்கிய இஸ்ரோ பயணிக்கும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+