இந்தாங்க எடுத்துக்கோங்க.. அனைத்து கடன்களையும் திரும்ப செலுத்துவதாக மல்லையா திடீர் அறிவிப்பு
Recommended Video

டெல்லி: 9,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா, வாங்கிய கடன்களை முழுவதுமாக செலுத்தப்போவதாக தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் மல்லையா இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது.
|
எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த நிலையில், ட்விட்டரில் மல்லையா கூறியுள்ளதாவது: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்பது நல்ல நிறுவனம், எங்களுக்கு விமானத்திற்கு தேவைப்படும் எரிபொருள் மிக அதிகமான விலைக்கு அதாவது பேரலுக்கு சுமார் 140 அமெரிக்க டாலர் வரை கொடுத்து வாங்கியதால் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதுவே வங்கி பணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியாததற்க்கு முக்கிய காரணம். நான் இப்பொழுது 100% வாங்கிய கடன்களை செலுத்த தயார். எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

புலம்பும் மல்லையா
பிரதமர் மோடிக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில், கடன்களை அடைக்க தான் எல்லா வித முயற்சியும் செய்து வருவதாக விஜய் மல்லையா குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தனது நிறுவனம் நாட்டின் கஜானாவிற்க்கு கடந்த முப்பது வருடங்கள் வருவாய் ஈட்டி தந்ததாகவும், தனது பிரபலமான நிறுவனத்தை இந்தநாடு இழந்துவிட்டதாகவும் மற்றொரு ட்வீட்டில் மல்லையா கூறியுள்ளார்.

வெற்றி
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு நேற்று நாடு கடத்தப்பட்டார். சட்டப் போராட்டத்தில் இந்தியாவின் வெற்றிாக இது பார்க்கப்படுகிறது.

திடீர் பல்டி
இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களுக்குள், விஜய் மல்லையா இப்படி ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் தப்ப முடியாது என்ற சூழ்நிலை வந்ததும், நல்லவரை போல மல்லையா பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications