ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் ஆயுதமான 'சனாதன தர்மம்'.. அஸ்ஸாம் முதல்வர் பேச்சால் பஞ்சாயத்து!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியின் மூலம் சனாதன தர்மத்தைப் பாதுகாப்போம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால் பர்கானா பிராந்தியத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 90%-ல் இருந்து 67% ஆக குறைந்துவிட்டது எனவும் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய 2 கட்டங்களாக மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இணை பொறுப்பாளரான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த தேர்தல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கானதாக இருக்காது. சனாதன தர்மத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவின் வெற்றியின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்போம்.
6 மாவட்டங்களை உள்ளடக்கிய சந்தால் பர்கானா பிராந்தியத்தில் 1951-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகை 26 லட்சம் பேர். அப்போது 90% இந்துக்கள்; 9.43%தான் முஸ்லிம்கள். பழங்குடிகளின் மக்கள் தொகை 10.34 லட்சமாக இருந்தது. இந்துக்களின் மக்கள் தொகையில் இது 44%. ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் மக்கள் தொகை 67% ஆக குறைந்துவிட்டது. 44% ஆக இருந்த பழங்குடிகள் மக்கள் தொகை வெறும் 28% ஆக குறைந்து போனது. புதியதாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது இந்துக்களின் விழுக்காடு 60% ஆகவும் குறையக் கூடும். பூர்வீக முஸ்லிம்களின் மக்கள் தொகை இங்கே அதிகரிக்கவில்லை. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் வழியாக ஜார்க்கண்ட்டுக்குள் ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்கள்தான் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த ஊடுருவல் முஸ்லிம்கள், பழங்குடி பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றி உள்ளனர். பழங்குடிகளின் நிலங்களைக் கைப்பற்றி பழங்குடி கிராமங்களின் தலைவர்களாக உருமாறி இருக்கின்றனர். பாஜக ஆட்சியில் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படுவர். இவ்வாறு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications