கோகாய்-க்கு எம்பி பதவி- நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலையும்: நீதிபதி குரியன் ஜோசப்
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பதன் மூலம் சாமானியர்களிடத்தில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்து போகும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குரியன் ஜோசப் கூறியுள்ளதாவது: நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்திதான் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நாங்கள் செய்தியாளர்களை சந்தித்தோம்.

நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் ஆகியோருடன் நானும் இணைந்து நீதித்துறையில் பிறரது தலையீடு குறித்து புகார் தெரிவித்திருந்தோம். இப்போது தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய் சமரசங்களை செய்து கொண்டு எம்பி பதவியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோகாய், ராஜ்யசபா எம்பி பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதித்துறை மீதான சாமானியர்களின் நம்பிக்கை சீர்குலைகிறது. நீதித்துறை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குரியன் ஜோசப் கூறினார். ஏற்கனவே தமக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகாய், முதலில் டெல்லி சென்று எம்.பி பதவியை ஏற்க வேண்டும். அதன்பின்னர் இப்பதவியை ஏன் ஏற்றுக் கொண்டேன் என விளக்கப் போவதாக கூறியிருந்தார்.
ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில்தான் மத்திய அரசுக்கு எதிரான ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை முன்வைத்து கடும் விமர்சனங்கள் இப்போது எழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications