கோகாய்-க்கு எம்பி பதவி- நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலையும்: நீதிபதி குரியன் ஜோசப்
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பதன் மூலம் சாமானியர்களிடத்தில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்து போகும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குரியன் ஜோசப் கூறியுள்ளதாவது: நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்திதான் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நாங்கள் செய்தியாளர்களை சந்தித்தோம்.

நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் ஆகியோருடன் நானும் இணைந்து நீதித்துறையில் பிறரது தலையீடு குறித்து புகார் தெரிவித்திருந்தோம். இப்போது தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய் சமரசங்களை செய்து கொண்டு எம்பி பதவியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோகாய், ராஜ்யசபா எம்பி பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதித்துறை மீதான சாமானியர்களின் நம்பிக்கை சீர்குலைகிறது. நீதித்துறை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குரியன் ஜோசப் கூறினார். ஏற்கனவே தமக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகாய், முதலில் டெல்லி சென்று எம்.பி பதவியை ஏற்க வேண்டும். அதன்பின்னர் இப்பதவியை ஏன் ஏற்றுக் கொண்டேன் என விளக்கப் போவதாக கூறியிருந்தார்.
ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில்தான் மத்திய அரசுக்கு எதிரான ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை முன்வைத்து கடும் விமர்சனங்கள் இப்போது எழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications