குட்டுவைத்த பாஜக.. இனி வார்த்தையில் கவனமாக இருப்பேன்.. கங்கனா ரனாவத்
டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தெரிவித்த கருத்துக்கு பாஜகவினரே கடுமையாக கண்டனத்தை தெரிவித்த நிலையில், இனி தனது வார்த்தையில் மிகவும் கவனமாக இருப்பேன் என்று எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர்போனவர். இவர் எது பேசினாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதே வழக்கம். கடந்த வாரம் காங்கிரஸ் ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரித்து படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை என்று கூறியிருந்தார்.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் கங்கனா. ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தார். இருந்தபோதும் கங்கனா திருந்தவில்லை.
அதைத்தொடர்ந்து, இந்த வாரம் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதுகுறித்து தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுகையில், "பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக மத்திய அரசும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் வைத்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். பஞ்சாப்பில் நடைபெற்ற அதே சூழ்நிலை இங்கும் நடந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து இதற்கான சதித்திட்டம் நடந்தன. நாடு யாரின் கைகளில் சென்றாலும் அதைப்பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த நாடு அறியாது. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது." என்று கூறியிருந்தார்.
இதனை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவினரை அவரைக் கண்டிக்க தொடங்கினர். முக்கியமாக பஞ்சாப் மாநில பாஜக மூத்தத் தலைவர் ஹர்ஜித் கரேவல் கங்கனாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மதம், விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கங்கனா கருத்து சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது என்று கூறியிருந்தார். மேலும், கங்கனாவுக்கு பாஜக சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விசாயிகள் சர்ச்சை கருத்து தொடர்பாக கங்கனா ரனாவத் தற்போது பேசியுள்ளார். அவர் கூறியதாவது: இனி என்னுடைய வார்த்தைகளில் நான் கவனமாக இருப்பேன். கட்சியின் கொள்கைகளின்படி இயங்குவேன். பாஜகவுக்கு தனிநபர்களைவிட தேசம்தான் முக்கியம். விவசாயிகள் தொடர்பான சர்ச்சைக் கருத்துக்கு கட்சித் தலைமை என்னை கண்டித்தது என்று தெரிவித்துள்ளார்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications