தமிழக எதிர்ப்புக்கு இடையே.. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம்.. மோடியிடம் அனுமதி கேட்ட எடியூரப்பா
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் வரத்து தடைபடும் என்பதால் தமிழக அரசும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்தது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த அணையை 67.16 டிஎம்சி கொள்ளளவில், ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் கட்டுவதாக கர்நாடகா தெரிவித்து இருந்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில் எந்த தடங்கலும் இருக்காது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று டெல்லியில் சந்தித்தார். நவம்பர் 19-ம் தேதி பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டைக் காணொலியில் துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், கர்நாடகத்தில் பாசனத் திட்டங்களான அப்பர் கிருஷ்ணா திட்டம்-3, அப்பர் பாத்ரா திட்டம் ஆகியவற்றுக்கு தேசிய அங்கீகாரம் கோரினார். இத்துடன், காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகதாது அணைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications