தீர்ப்பே வரவில்லை.. இடைத் தேர்தலா.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு
டெல்லி: கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கூட்டணியைச் சேர்ந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இதில் அடக்கம்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. சூட்டோடு சூடாக 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.

தீர்ப்பு எப்போது?
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் காலியாக உள்ள 17ல், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் வேகம்
இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ், அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி இல்லை என்று மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளதால், அந்த கட்சியும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து களம் இறங்கியுள்ளது. பாஜகவில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவில்லை.

திரிசங்கு சொர்க்கம்
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால், மக்கள் மத்தியில் பாஜக மீது கோபம் ஏற்படும், வெற்றி பெறுவது மிகவும் கடினம் என பாஜக நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் முதல்வர் எடியூரப்பா, தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளார். எனவே, வேட்பாளர் தேர்வில் கடும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கி விட்டால் அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கலாம் என்று யோசிக்க முடியும். ஆனால் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வராத காரணத்தினால் 17 எம்எல்ஏக்களின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல மாறிவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள். அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 18ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னமும் தீர்ப்பு வெளியாகவில்லை. எனவே தீர்ப்பு வெளியாகும் வரை இடைத் தேர்தலை நடத்தக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை
முன்னதாக, அக்டோபர் 21ஆம் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் அப்போது உச்சநீதிமன்றத்தில், தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட, வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத் தேர்தலை டிசம்பர் 5ஆம் தேதிக்கு பின்னர் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications