அப்படியே தலைகீழா மாறிடுச்சே! காஷ்மீரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்.. ஏன் இப்படி?
டெல்லி: காஷ்மீரில் அதிகட்சமாக நேற்று 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்த அளவு வெப்பம் பதிவாவது இதுவே முதல் முறையாகும். தலைநகர் டெல்லியில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இந்தியாவின் வட எல்லையான காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு எப்போதுமே தட்பவெப்ப நிலை குளிராக இருக்கும். ஆண்டு முழுவதுமே குளிர்ச்சியான சூழலே காணப்படும். குறிப்பாக குளிர் காலம் வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அமையும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அங்கு குளிர் காலம் என்பதால் வெப்ப நிலை உறை நிலைக்கு சென்று விடும்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கு கீழ் வெப்பநிலைக்கு சென்றது. ஆனால், தற்போது காஷ்மீரில் பருவமழை வழக்கத்திற்கு மாறாக மாறிவிட்டது. ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு 100 சதவீதம் பற்றாக்குறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வழக்கமாக நிலவும் குளிருக்கு பதிலாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு: நேற்று காஷ்மீரில் அதிகட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்த அளவு வெப்பம் பதிவாவது இதுவே முதல் முறையாகும். காஷ்மீரின் சமவெளிப்பகுதிகளில் 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் ஆக வெப்ப நிலை நிலவுகிறது. வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில் காஷ்மீரில் இயல்புக்கு மாறாக வெப்பம் அதிகரித்து இருப்பது மக்களுக்கு சற்று வியப்பை அளித்துள்ளது.
டெல்லியில் நடப்பு குளிர் காலத்தில் மிக குறைந்த வெப்ப நிலை இன்றுதான் பதிவானது. குறைந்தபட்ச வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. நடுங்க வைக்கும் குளிரால் டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வழக்கத்திற்கு மாறான இந்த தட்பவெப்ப நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்ப நிலையில் இப்படி திடீரென மாற்றம் ஏற்படுவது சமீபத்திய காலங்களில் சகஜமாக மாறிவிட்டது.
இயல்புக்கு மாறான காலநிலை: சம்மரில் இதேபோன்ற சூழலை காண முடிந்தது. எனினும், வரும் நாட்களில் மேற்கில் இருந்து வரும் மாற்றம் காரணமாக பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலால் குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சுற்றுலாப்பயணிகள் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது.
குல்மர்க் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் புக்கிங்குகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இந்த பகுதிகளில் குளிர் காலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டு இயல்புக்கு மாறான காலநிலையால் சுற்றுலாப்பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications