பாஜக மத்திய அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக 6 மாதம் சிறை தண்டனை பிரிவின் கீழ் வழக்கு!
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி மீது 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சூர் பூரம் திருவிழாவின் போது ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்திய புகாரின் பேரில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த மாதம் கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆம்புலன்ஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்றில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பயணித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிராக திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு தரப்பட்டது. மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆம்புலன்ஸை சுரேஷ் கோபி பயன்படுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதனை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மறுத்திருந்தார். தமக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது; இதனால்தான் ஆம்புலன்ஸில் செல்ல நேர்ந்தது; திருச்சூர் பூரம் திருவிழாவில் பாதுகாப்பு நடைமுறைகள் எதனையும் தாம் மீறவும் இல்லை எனவும் அத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விளக்கம் தந்திருந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் தாம் தயார் என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரளா மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி செய்தது சட்டவிரோதம் என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும்; அத்தகைய பிரிவுகளின் கீழ் கேரளா மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications