கூகுளில் இருந்த ''அந்த'' தவறு.. கண்டுபிடித்த 23 வயது இந்திய மாணவர்.. எப்படி கவுரவித்தது தெரியுமா?
கூகுளில் உள்ள குறைகளை கண்டுபிடித்த காரணத்தால் கூகுளின் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெயர் இடம்பிடித்துள்ளது.
டெல்லி: கூகுளில் உள்ள குறைகளை கண்டுபிடித்த காரணத்தால் கூகுளின் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெயர் இடம்பிடித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள முக்கியமான டெக் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அடுத்த இளம் படை இந்த பணிகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தயாராகிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு கூகுளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

புத்தகம் என்ன
கூகுளில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இடம் கிடைக்கும். அதாவது கூகுள் மேலும் சிறப்பாக இயங்கும் வகையில் அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் நபர்களுக்கு இந்த புகழ் கிடைக்கும். இதில் சில இந்தியர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது.

என்ன தவறு
கூகுளில் உள்ள சில அதிகாரப்பூர்வ பக்கங்களில் அந்த பக்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் கூட வந்து சில தகவல்களை போஸ்ட் செய்ய முடியும் என்று கேரளாவை சேர்ந்த வைஷ்ணவ் கண்டுபிடித்து இருக்கிறார். அதாவது சில சாப்ட்வேர்கள் மூலம், ஒரு பக்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர் ஒருவர் அந்த பக்கத்தில் போஸ்ட் செய்ய முடியும், இதை கூகுளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.

புதுச்சேரி
இந்த கண்டுபிடிப்பு காரணமாக அவரை பாராட்ட கூகுள் முடிவெடுத்துள்ளது. அவருக்கு தற்போது ''ஹால் ஆப் ஃபேம்'' விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் புதுச்சேரியில்தான் பி.டெக் படித்து வருகிறார். இவருக்கு 23 வயதுதான் ஆகிறது. எதிர்காலத்தில் கூகுளில் பணியாற்ற விருப்பம் என்று இவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதேபோல்
இதேபோல் ஏற்கனவே சிலர் கூகுளில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். சென்ற வருடம் அதுல் ஜெயராமன் என்ற நபரும், ஸ்ரீநாத் சசிகுமார் என்ற நபரும் இதேபோல் கூகுள் பக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுபிடித்தனர். பின் அதனால் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications