ஜிடிபி வீழ்ச்சி.. எதிர்பார்த்ததுதான்... விரைவில் சரியாகிவிடும் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரலாறு காணாத வகையில் ஜிடிபி வீழ்ச்சியடைந்திருந்தாலும் அடுத்த காலாண்டில் நிலைமை சரியாகிவிடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 23.9% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தை பெரும் சரிவுக்கு கொண்டிருக்கிறது கொரோனா லாக்டவுன்.

KV Subramanians comments on GDP figures

இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் இந்த நிலைமை குறித்து கூறியதாவது:

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. தற்போதைய முதலாம் காலாண்டு ஜிடிபி சரிவு என்பது எதிர்பார்த்த பாதையில்தான் வந்துள்ளது.

கடந்த 1870 ஆண்டுக்குப் பின் உலக நாடுகளில் ஜிடிபி இவ்வளவு மிக மோசமான பாதிப்பை இப்போதுதான் சந்தித்துள்ளது. பிற நாடுக்ளைப் போல முதலாம் காலாண்டில் இந்தியாவும் லாக்டவுனை அமல்படுத்தியது.

இந்தியாவின் பொருளாதார அளவுதான் இங்கிலாந்து. இங்கிலாந்தில் 22% சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறோம். சில முக்கிய துறைகளில் ஏப்ரல் மாதம் 38% சரிவு இருந்தது. இது ஜூலையில் -9.6% ஆக உள்ளது. மே மாதத்தில் 22% சரிவில் இருந்த துறைகள் ஜூனில் 13% ஆகவும் மாறி இருக்கின்றன.

இந்தியாவில் நுகர்வு விகிதமான 27% குறைந்திருக்கிறது. இது நிச்சயமாக ஜிடிபியில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஓவர்களில் நிதானமாக விளையாடிவிட்டு அடுத்த 40 ஓவர்களில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைப் போல கொரோனா லாக்டவுனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும். நிச்சயம் அடுத்த காலாண்டில் நிலைமை சீராகிவிடும்.

இவ்வாறு கே.வி. சுப்பிரமணியன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+