ஜிடிபி வீழ்ச்சி.. எதிர்பார்த்ததுதான்... விரைவில் சரியாகிவிடும் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்
டெல்லி: வரலாறு காணாத வகையில் ஜிடிபி வீழ்ச்சியடைந்திருந்தாலும் அடுத்த காலாண்டில் நிலைமை சரியாகிவிடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 23.9% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தை பெரும் சரிவுக்கு கொண்டிருக்கிறது கொரோனா லாக்டவுன்.

இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் இந்த நிலைமை குறித்து கூறியதாவது:
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. தற்போதைய முதலாம் காலாண்டு ஜிடிபி சரிவு என்பது எதிர்பார்த்த பாதையில்தான் வந்துள்ளது.
கடந்த 1870 ஆண்டுக்குப் பின் உலக நாடுகளில் ஜிடிபி இவ்வளவு மிக மோசமான பாதிப்பை இப்போதுதான் சந்தித்துள்ளது. பிற நாடுக்ளைப் போல முதலாம் காலாண்டில் இந்தியாவும் லாக்டவுனை அமல்படுத்தியது.
இந்தியாவின் பொருளாதார அளவுதான் இங்கிலாந்து. இங்கிலாந்தில் 22% சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறோம். சில முக்கிய துறைகளில் ஏப்ரல் மாதம் 38% சரிவு இருந்தது. இது ஜூலையில் -9.6% ஆக உள்ளது. மே மாதத்தில் 22% சரிவில் இருந்த துறைகள் ஜூனில் 13% ஆகவும் மாறி இருக்கின்றன.
இந்தியாவில் நுகர்வு விகிதமான 27% குறைந்திருக்கிறது. இது நிச்சயமாக ஜிடிபியில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஓவர்களில் நிதானமாக விளையாடிவிட்டு அடுத்த 40 ஓவர்களில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைப் போல கொரோனா லாக்டவுனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும். நிச்சயம் அடுத்த காலாண்டில் நிலைமை சீராகிவிடும்.
இவ்வாறு கே.வி. சுப்பிரமணியன் கூறினார்.
-
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications