அல்லாடும் ஆம் ஆத்மி.. கெஜ்ரிவாலும் திகாரில்.. மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி, திகார் ஜெயிலில் உள்ளார் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.. இவர் ஜாமீன் கேட்டு அப்பீல் செய்துள்ளார்.. இந்த மனு மீது, டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கபோவதால், மிகுந்த பரபரப்பை தேசிய அளவில் இது ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2021, நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில், ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வெடித்தன.. இதையடுத்து, சிபிஐ, அமலாக்க துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் நடத்தி வருகிறது..

அமைச்சர்: இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த, சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதே விவகாரத்தில்தான், கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் மணீஷ் சிசோடியா, ஜாமீன் கேட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.. அதில், "டெல்லியில் எம்பி தேர்தல் மே 25ம் தேதி நடக்க போவதால், ஆம் ஆத்மி தரப்பின் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.. தேர்தல் வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கறது.. அதனால், எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறப்பு நீதிபதி: இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, "டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. அதனால் இப்போதைக்கு மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் தர முடியாது.. வேறு எந்தவிதமான நிவாரணங்களும் தர முடியாது என்று சொல்லி கடந்த 30ம் தேதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து, மணீஷ் சிசோடியா தரப்பினர், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.. அதில், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீன் வழங்குவதுடன், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமர்வு: மணீஷ் சிசோடியாவின் இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வரப்போகிறது.. மேல் முறையீட்டு மனு மீது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அதாவது மே 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications