லாக்டவுனை நீட்டிக்க மேலும் பல மாநிலங்கள் ஆதரவு- முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுனை நீட்டிக்க பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் லாக்டவுனை மே 7-ந் தேதி வரை நீட்டிப்போம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிஷா மாநிலங்களும் லாக்டவுனை நீட்டிக்க வேண்டு என்பதை வலியுறுத்தியுள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவதாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதால் மே 18-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியுள்ளார். இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமான இந்த ஆலோசனையின் போது லாக்டவுன் நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications