2004 முதல் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் "பொய்யாகிப் போன" 5 எக்ஸிட் போல் முடிவுகள் எவை தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் அப்படியே நடந்துவிடப் போவது இல்லை என்பதை கடந்த கால சில எக்ஸிட் போல் முடிவுகள் உறுதியாக சொல்லி இருக்கின்றன.
18-வது லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. 10-க்கும் மேற்பட்ட எக்ஸிட் போல் முடிவுகள் மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன. ஒரு சில எக்ஸிட் போல் முடிவுகள், தொங்கு நாடாளுமன்றம் அமையலாம்.. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்கின்றன.

கடந்த காலங்களில் பொய்யாகிப் போன 5 எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்ப்போம்.
2004 லோக்சபா தேர்தல்: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 240 முதல் 275 இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன தங்களது எக்ஸிட் போல் முடிவுகளில். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 187 இடங்களே கிடைத்தன. அத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 216 இடங்களைக் கைப்பற்றியது.
2015 பீகார் தேர்தல்: 2015-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகதான் ஆட்சியைக் கைப்பற்றும் என பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் அத்தேர்தலில் ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் கூட்டணிதான் அமோக வெற்றியைப் பெற்றது. பீகார்ல் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வென்றது என்பது சரித்திரம்.
2017 உ.பி. தேர்தல்: 2017-ல் உ.பி. சட்டசபை தேர்தல் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தொங்கு சட்டசபைதான் அமையும் என கணித்தன. அத்தேர்தலில் பாஜகதான் அதிகமான இடங்களைப் பெற்றன. மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றியது.
2020 பீகார் தேர்தல்: 2020-ம் ஆண்டு பீகார் சட்ட்சபை தேர்தலில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன. ஆனால் பாஜக-ஜேடியூ கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது.
2021 மே.வங்க தேர்தல்: 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பான இந்தியா டுடே- ரிபப்ளிக் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன. ஆனால் மொத்தம் உள்ள 294 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களைக் கைப்பற்றி எக்ஸிட் போல் முடிவுகளை பொய்யாக்கியது. பாஜகவுக்கு 77 இடங்கள்தான் கிடைத்தன.
இதேபோல 2015-ல் டெல்லி சட்டசபை தேர்தல், 2023-ல் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இருந்து மாறுபட்டே இருந்தன என்பதும் வரலாறுதான்.












Click it and Unblock the Notifications