டெல்லி சாணக்கியாவிற்கு என்ன ஆச்சு? பவாரின் பவர் தெரியுதா?.. அமித் ஷாவை வம்பிழுக்கும் என்சிபி!
டெல்லியில் அரசியல் சாணக்கியர் அமித் ஷா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் தோற்றுவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மும்பை: டெல்லியில் அரசியல் சாணக்கியர் அமித் ஷா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் தோற்றுவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
கடைசியாக ஒரு வழியாக மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
ஐந்து வருடமும் அங்கு சிவசேனாதான் ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலும் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

சரத் பவார்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களுக்கு முக்கிய காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பார்க்கப்படுகிறார். பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக இவர் நகர்த்திய காய்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளது. சிவசேனாவை என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வந்ததும் இவரின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

மொத்தம் எத்தனை
மொத்தமாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் வெளியேற்றி உள்ளது. பாஜகவிற்கு இருந்த மிகப்பெரிய இந்துத்துவா கட்சி நண்பன் என்றால் அது சிவசேனாதான். ஆனால் தற்போது சரத் பவார் அவர்கள் இருவரையும் பிரித்து இருக்கிறார்.

அமித் ஷா எப்படி
இந்த நிலையில் அமித் ஷாவை கிண்டல் செய்து தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். அதில், டெல்லியில் யாரோ அரசியல் சாணக்கியர் இருக்கிறார் என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால் அவர் தற்போது காணாமல் போய்விட்டார்.

அமித் ஷா தோல்வி
அவரின் திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை. சரத் பவார் தன்னுடைய அரசியல் அனுபவத்தை நிரூபித்துவிட்டார். தன்னுடைய சக்தி என்ன என்று அவர் மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார். பாஜகவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல் சாணக்கியா
இந்தியாவின் உண்மையான அரசியல் சாணக்கியர் யார் என்பதை தற்போது சரத் பவார் நிரூபித்துள்ளார். டெல்லியின் மகுடம் முன் மகாராஷ்டிரா என்றும் மண்டியிடாது. அதை சரத் பவாரின் அரசியல் சாணக்கியத்தனம் இன்று நிரூபித்து இருக்கிறது. ஜெய் மகாராஷ்டிரா, என்று நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications