பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், என்சிபி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் தாக்கல்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிரான வழக்கில் பாஜக-என்சிபி (அஜித்பவார்) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் 54 என்.சி.பி.எம். எல்.ஏக்களின் கையெழுத்துடன் அஜித்பவார் ஆளுநரிடம் கொடுத்த கடிதம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிராவில் திடீரென பாஜகவின் பட்னாவிஸுக்கு முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல் என்சிபியின் அஜித் பவாருக்கும் துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி சரத்பவார் பிரிவு தரப்பில் உடனே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.
அத்துடன் பட்னாவிஸ் அரசுக்கான ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதம், பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய போது, பட்னாவிஸூக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம் மற்றும் 54 என்.சி.பி. எம்.எல்.ஏக்கள் கையெழுத்துடன் அஜித் பவார், ஆளுநர் கோஷ்யாரிடம் கொடுத்த கடிதம் ஆகியவற்றை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.
இதனையடுத்துஅனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. பின்ன இவ்வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications