மணிப்பூர்: மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பூட்டிய மாணவர் அமைப்பு! குக்கிகளை வெளியேற்றும் அஸ்ஸாம்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் சுயாட்சி நிர்வாகக் கவுன்சில் கோரி குக்கிகள் முன்னெடுத்து வரும் ஆயுதப் போராட்டம் மற்றும் வன்முறைகளை ஒடுக்க தவறியதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்களை மைத்தேயி இனக்குழுவின் மாணவர் அமைப்பினர் இழுத்துப் பூட்டினர். மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் யாரும் செல்லக் கூடாது எனவும் மைத்தேயி மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,000 குக்கி இனக்குழுவினரை மீண்டும் மணிப்பூருக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மணிப்பூரில் குக்கி இன மக்கள், தங்களது பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி கவுன்சில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் மைத்தேயி இனத்தினரை கடத்தி கொடூரமாகவும் படுகொலை செய்து வருகின்றனர். இதனால் மணிப்பூரில் பெரும் பதற்றம் தொடருகிறது. குக்கி ஆயுதக் குழுவினரை ஒடுக்குவதற்காக 20,000 ராணுவத்தினர் மணிப்பூரில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மணிப்பூர் மாநில பாஜக அரசும் மத்திய பாஜக கூட்டணி அரசும் குக்கி இனக்குழுவின் தாக்குதல்களை கட்டுப்படுத்தவில்லை என்கிற கோபத்தில் மைத்தேயி மக்கள் குமுறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மணிப்பூர் மாநிலத்தில் மத்திய- மாநில அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டி ஊழியர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியது மைத்தேயி மாணவர் அமைப்பு. அத்துடன் மத்திய- மாநில அரசு ஊழியர்கள் யாரும் அலுவலகங்களுக்கு செல்லக் கூடாது எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே அஸ்ஸாமில் அகதிகளாக தஞ்சமடைந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,000 குக்கி இன மக்களை மீண்டும் மணிப்பூருக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. குக்கி இனக்குழுவினருக்கு ஏற்கனவே மிசோரம் மாநில அரசு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் மணிப்பூர் மாநில அரசுக்கும் மிசோரமுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தற்போது குக்கி இனமக்களுக்கு எதிரான அஸ்ஸாம் நடவடிக்கையில் மிசோரம் என்ன எதிர்வினையாற்றும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications