தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எப்படி தடுப்பூசி கிடைக்குது?மத்திய அரசுக்கு மணீஷ் சிசோடியா கேள்வி
டெல்லி: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு; ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகள் தாராளமாக கிடைக்கிறது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளைக் கொடுத்தால் மட்டுமே இம்முகாம்கள் திறக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகள் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. அதாவது ஜூன் 10-ந் தேதிக்கு முன்னர் அந்த தடுப்பூசிகள் எங்களுக்கு கிடைக்காது என்கிறது மத்திய அரசு.
டெல்லியைப் பொறுத்தவரையில் அடுத்த மாதம் முதல் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு மொத்தம் 5.5 லட்சம் தடுப்பூசிகள் தேவை. கடந்த ஏப்ரல் மாத 4.5 லட்சம்; மே மாதம் 3.67 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்துள்ளது மத்திய அரசு. டெல்லிக்கு தேவை 1.84 கோடி தடுப்பூசிகள்.
கொரோனா தடுப்பூசி விநியோகப் பொறுப்பு மத்திய அரசின் கையில் உள்ளது. மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கிடைத்து வருகிறது?
இவ்வாறு மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications