மத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு
டெல்லி: நமது தேசத்தைப் பாருங்கள் என்ற இணையக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலா அமைச்சகம் விடுதலைப் போராட்ட இயக்கம் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு ஐந்து கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
கடந்த 8.8.2020 அன்று , '1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்' என்ற இணைய நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது. சுதந்திர தினத் தொடரில் இது முதலாவதாகும். நமது தேசத்தைப் பாருங்கள் தொடரில் இது 45-வது அத்தியாயமாகும்.

நமது தேசத்தைப் பாருங்கள் தொடர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையைப் பறைசாற்றுவதன் முயற்சியாகும். இது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற எழுச்சியை மெய்நிகர் தளத்தில் தொடர்ந்து அளித்து வருகிறது.
பரிதாபகரமான சமூகப் பொருளாதார நிலை, நிலப் பிரச்சினைகள், வருவாய் நிர்வாகம், பொருளாதாரச் சீரழிவு, நிர்வாகத்தில் இந்தியர்களின் கீழ் நிலை, குளறுபடியான கோட்பாடு, பகதூர் ஷா ஜபார் அவமதிப்பு, பாரபட்சமான காவல்துறை, நீதித்துறை, இந்திய சிப்பாய்களிடம் வேறுபாடு ஆகியவற்றால் கிளர்ச்சி வெடித்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டன.
1857-ஆம் ஆண்டு முதல் சுதந்திரப்போரில் பங்கு கொண்டு, தில்லியின் எல்லைகளை அடைத்து பிரிட்டிஷ் படைகள் முன்னேறாத வண்ணம் தடுத்து, தில்லியை 120 நாட்கள் சுதந்திரமாக வைத்திருந்த பரீதாபாத்தின் பல்லப்கர் மன்னர் ராஜா நாகர் சிங் போன்ற அதிகமாக வெளியில் பிரபலமடையாதவர்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களைப் பட விளக்கம் அளித்தவர்கள் வழங்கினர். வேறு சண்டைகளும் இதில் காட்டப்பட்டன.
முதல் சுதந்திரப்போரில் தொடர்புடைய பல்வேறு இடங்கள் பட்டியலிடப்பட்டன. 1857 போர் பற்றிய தகவல்கள் கொண்ட படம் புதிய அனுபவமாக இருந்தது.
நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-நிர்வாக துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்.
இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயம் ஆகஸ்ட் 12-ஆம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இதன் தலைப்பு , பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிகம் தெரியாத கதைகள் என்பதாகும். தொடருக்கான பதிவுகளை https://bit.ly/LesserKnownDAD-இல் செய்யலாம்.
இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications