10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவிய மங்கி பாக்ஸ்.. 90 பேருக்கு பாதிப்பு.. வேகமாக பரவும் வைரஸ்
டெல்லி: 10 நாட்களில் 12 நாடுகளுக்கு மங்கி பாக்ஸ் பரவியுள்ளது. இது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இந்த கொரோனா தற்போது 3ஆவது அலை, 4 ஆவது அலை என பரவிக் கொண்டே இருக்கிறது.
இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனினும் கொரோனா அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் மீண்டும் தனது வெர்ஷனை மாற்றி தலைதூக்கி கொண்டே வருகிறது.

ஐரோப்பா
இந்த நிலையில் புதிதாக மங்கிபாக்ஸ் எனும் வைரஸ் தொற்று அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த புதிய தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

10 நாட்களில் 12 நாடுகள்
எனினும் கடந்த 10 நாட்களில் 12 க்கும் அதிகமான நாடுகளில் 90 க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளை இந்த தொற்று பாலியல் உறவுகளிலும் அதிலும் குறிப்பாக ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்ளும் போது அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு
இந்த நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு உஷார் நிலை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுர் மாண்டவியா தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றை தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

வெளிநாடுகள்
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை முறையாக கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுவாக வெளிநாட்டு பணிகள் போக்குவரத்து அதிகம் காணப்படும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் உரிய கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட்
1958 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஒரு சீரம் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவியிருந்தது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாலேயே இதற்கு மங்கிபாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. பெரியம்மையை போல் இதுவும் ஒரு அம்மை நோயாகும். உடலில் கொப்புளங்கள் போல் எழும்புகின்றன.

தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை யாருக்கும் மங்கிபாக்ஸ் இருப்பது கண்டறியப்படவில்லை. 1980 ஆம் ஆண்டு முதல் சின்னம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறும் உலக சுகாதார நிறுவனம், மங்கிபாக்ஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பாதித்தால் காய்ச்சல், தலை வரி, உடல் வலி ஏற்படும். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் சின்னம்மைக்கான தடுப்பூசி மங்கி பாக்ஸிற்கு எதிராக செயல்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications