முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்படும்- டிச.10-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் இறுதி விசாரணைகள் விரைவாக நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம், கேரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

கேரளா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கண்காணிப்பு குழு விசாரித்து வருகிறது. தற்போதைய நிலையில் அவசர உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்பட தேவை இல்லை என்றார். தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும் உடனடியான உத்தரவுகள் எதுவும் தற்போது தேவை இல்லை. இறுதி விசாரணையை தொடங்கலாம் என்றார். இதேபோல் மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், இறுதி கட்ட விசாரணைகள் விரைவாக நடத்தப்படும். தமிழகம், கேரளா தரப்பு தங்களது வாதங்களை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளா அரசைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்கவும் கேரளா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் தமிழக அரசோ, இதுவரையிலான பல்வேறு ஆய்வுக் குழுக்களின் முடிவுகளை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணை பலமானதாகவே இருக்கிறது. 142 அடிக்கு நீரை தேக்கலாம் என வாதிட்டு வருகிறது.
அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரளா அரசுதான் பொய் பிரசாரம் செய்து வருகிறது எனவும் தமிழகம் குற்றம்சாட்டி இருக்கிறது. ஆனாலும் கேரளா அரசு இடைவிடாமல், 126 ஆண்டுகள் பழமையானது முல்லைப் பெரியாறு அணை. அதிக அளவு நீரை தேக்கினால் கூடுதல் அழுத்தத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என வாதிடுகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications