மும்பை தாக்குதல்: பயங்கரவாதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கின் குற்றவாளியான தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சியானா என்.ஐ.ஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடப்பட்டது. இதில், 175 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள் மும்பையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். கண்ணில் பட்ட மக்களை துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி மற்றும் பாகிஸ்தானில் பிறந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணா (64) ஆகிய இருவரும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
டேவிட் கோல்மன் ஹெட்லி கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார். அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். தஹாவூர் ராணாவும் அதே ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தஹாவூர் ராணை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடமும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்ற உத்தரவுப்படி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு விமானம் மூலம் ராணாவை இந்தியா அழைத்து வந்தனர். இந்த விமானம் டெல்லி வந்தடைந்ததும் அவரை முறைப்படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன்பு என்ஐஏ அதிகாரிகள் ராணாவை நேற்று இரவு ஆஜர்படுத்தினர். 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து ராணாவிடம் என்.ஐ.ஏ.போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications