பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா! ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்!
டெல்லி: நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த நரேந்திர மோடி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. இதேபோல இந்தியா கூட்டணியும் சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெற முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை முறைப்படி நரேந்திர மோடி கொடுத்தார். மேலும் மத்திய அமைச்சரவையின் ராஜினாமா, 17-வது லோக்சபாவை கலைக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையையும் ஜனாதிபதியிடம் கொடுத்தார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி, அமைச்சரவையின் ராஜினாமாக்களையும் லோக்சபாவை கலைக்கும் பரிந்துரையையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். மேலும் புதிய அரசு பதவி ஏற்கும் வரை இடைக்கால பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார். இதனை நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications