வெப்பநிலை அதிகரிப்பு.. தமிழகத்தில் இந்த 2 நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்.. நாசா பகீர் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வளரும் நாடுகளுக்கும் சரி, வளர்ந்த நாடுகளுக்கும் சரி பருவநிலை மாற்றம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் சராசரி வெப்பநிலை அதிகளவு உயர்ந்து மிகப்பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

Recommended Video

    Climate Change காரணமாக ஏற்படும் பாதிப்புகள்.. பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்| Explained

    கடல்நீர் மட்டம் உயருதல், பனிப்பாறைகள் உருகுதல், சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம்தான் மிகபெரும் காரணமாகும். குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பூமிப்பந்தின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

     மனிதர்கள்தான் காரணம்

    மனிதர்கள்தான் காரணம்

    பருவநிலை மாற்றத்துக்கு முழுக்க, முழுக்க காரணம் மனிதர்கள்தான். பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் கரிமில வாயுவை அதிகரித்து வெப்பநிலை உயர காரணமாகின்றன. இதேபோல் மனிதர்கள் காடுகளை அழிப்பதால் அதிகளவு கார்பனும் வெளியிடப்பட்டு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. அதாவது உலகத்தில் தொழில் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது 30% அதிகமாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி கொடுக்கின்றன..

    பூமியின் வெப்பநிலை உயரும்

    பூமியின் வெப்பநிலை உயரும்

    இந்த பூமியை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள் என்ற மிகப்பெரும் அதிர்ச்சியை நமது அளிக்கிறது ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு. அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளது. வெப்ப நிலை உயர்வால் நாம் முன்பே கூறியபடி வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு, கடல் நீர்மட்டம் உயருதல், பனிப்பாறைகள் வேகமாக உருகுதல் உள்ளிட்ட விளைவுகளை மனித குலம் சந்திக்கும் என்று ஐபிசிசி மிக தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்தியாவுக்கு அதிர்ச்சி

    இந்தியாவுக்கு அதிர்ச்சி

    இதில் குறிப்பிட்டத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளின் கடல்நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் என்று அதிர்ச்சி குண்டை தூக்கி வீசியுள்ளது. இந்த ஐபிசிசி அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கு மிகப்பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா. 2,100-ம் ஆண்டுக்குள் 12 கடலோர இந்திய நகரங்கள் நீருக்குள் மூழ்கும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது .

    சென்னை, தூத்துக்குடி

    சென்னை, தூத்துக்குடி

    2100-ம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் சுமார் 2.7 மீட்டர் ஆழத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது நாசா. குஜராத், ஒடிசா, கல்கத்தா, மகாராஷ்டிரா,கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நகரங்கள் உள்ள இந்த பட்டியலில் நமது தமிழ்நாடும் இணைந்து இருப்பதுதான் வேதனையின் உச்சம். தமிழ்நாட்டில் சிங்கார சென்னை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருப்பததாக நாசா கூறியுள்ளது.

    கேரளா, குஜராத்

    கேரளா, குஜராத்

    2100-ம் ஆண்டில் சென்னை 1.87 அடியும், தூத்துக்குடியில் 1.9 அடிக்கு கடல்நீர்மட்டம் உயரும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கண்ட்லா, ஒக்ஹா மற்றும் பவுநகர், மகாஷ்டிரா தலைநகர் மும்பை, கோவா மோர்முகாவ், கர்நாடகாவின் மங்களூரு, ஆந்திராவின் விசாகப்பட்டினம்,
    ஒடிசாவின் பரதீப், கொல்கத்தாவின் கிதிர்பூ மற்றும் கேரள மாநிலம் கொச்சி ஆகியவை 2100-ம் ஆண்டில் நீரில் மூழ்கி காணாமல் போகும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உலக நாடுகளுக்கு அறிவுரை

    உலக நாடுகளுக்கு அறிவுரை

    இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கு மனித குலம் ஏற்படுத்திய கெடுதலே இந்த எதிர்கால விளைவுகளுக்கு எல்லாம் காரணம் என்று நாசா தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டியது அவசியம் என்றும் உலக நாடுகளுக்கு நாசா அறிவுறுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+