லோக்சபா தேர்தல்.. மகாராஷ்டிராவில் பாஜகவிற்கே வாய்ப்பு.. 26-30 சீட்கள் கன்பார்ம்.. டைம்ஸ் நவ்
டெல்லி: மகராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26-30 லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கட்டிலில் அமர தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபடியும் பாகாவை மத்தியில் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜகவை ஒரே அணியாக நின்று வீழ்த்தும் திட்டத்துடன் இந்தியா கூட்டணி திட்டம் வகுத்துள்ளது. இதனால், வரும் லோக்சபா தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மகராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26-30 லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் Times Now- ETG Research கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-
மொத்த இடங்கள்: 48
பாஜக கூட்டணி: 26-30
இந்தியா கூட்டணி: 16-20
இதர கட்சிகள்; 1-2.












Click it and Unblock the Notifications