நீட் ஜேஇஇ தேர்வு...விபரீத புத்தி...பிரதமர் தவறா... சுப்ரமணியன் சுவாமி ட்வீட்!!
டெல்லி: துவக்கத்தில் இருந்தே நீட் ,ஜெஇஇ தேர்வுகளுக்கு பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த தேர்வை தற்போது நடத்துவதன் மூலம் விபரீத புத்தி உடையவர்கள் யார் என்பதை காலம் காட்டும் என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நீட் ,ஜேஇஇ தேர்வுகளை தற்போது நடத்துவது சாத்தியம் இல்லாதது. இந்த தருணத்தில் தேர்வு நடத்துவது பெரிய நகரங்களில் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத்தான் உதவும். ஏழை மாணவர்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவது இல்லை. கடந்த ஐந்து மாதங்களாகவே கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய இன்டர்நெட் வசதி இல்லை. அவர்களால் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியவில்லை. நூலகங்களுக்கும் அவர்களால் செல்ல முடியவில்லை'' என்று பதிவிட்டு இருந்தார்.
தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், ''நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று டெல்லிஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அப்படியென்றால் தொடர்ந்து பொது முடக்கம் செய்யப்பட்டு இருப்பதால் பொருளாதாரமும் நாட்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கம் தவறானதா? இன்னும் நாட்டின் பல இடங்களில் பொது முடக்கம் அமலில் இருக்கிறது'' என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அனைத்து ஏற்பாடுகளும் தயார்...பின் வாங்க முடியாது...தேர்வு முகமை திட்டவட்டம்!!
இதையடுத்து மேலும் ஒரு பதிவில், ''நீட், ஜேஇஇ தேர்வுகளை தற்போது நடத்துவதால் விபரீத புத்தி உடையவர்கள் யார் என்பதை நேரம் வரும்போது அறிந்து கொள்ளலாம்'' என்று பதிவிட்டுள்ளார்.