‛நேரு’ பெயர் இருக்க கூடாது? டெல்லி அருங்காட்சியக நூலகத்தின் பெயர் மாற்றம்! காங்கிரசுக்கு வந்த கோபம்
டெல்லி: டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) பெயர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேருவின் பெயர் அகற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பெயருக்கு அனைவரையும் வியக்க வைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரிட்ஷ்காரர்கள் மற்றும் முகலாயர்களை குறிக்கும் வகையில் இருக்கும் தெருக்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை ‛அம்ரித் உத்யன்' என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. முகல் என்பது முகலாயர்களை குறிக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் பிரபலமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் என்பது பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலக(பிஎம்எம்எல்) சொசைட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவரான என நிர்பேந்திரா மிஸ்ரா உறுதி செய்துள்ளார். நாட்டில் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது இதுபற்றி அதன் துணைத் தலைவர் ஏ சூர்ய பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இப்போது பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சொசைட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அந்த அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டியின் சிறப்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில தான் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரில் இருந்து நேருவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேருவின் பெயரில் உள்ள கட்டடங்களில் இருந்து நேருவை சிலரால் அகற்றி அவரது புகழை மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நேரு இந்தியாவுக்காக செய்த செயல்கள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications