கோவா, ஹரியானா, லடாக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! TDP மூத்த தலைவருக்கு வாய்ப்பு
டெல்லி: கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதியதாக ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்திருக்கிறார். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) மூத்த தலைவரான அசோக் கஜபதி ராஜு கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு மூத்த தலைவருக்கு மத்திய அரசு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக தேர்தவாகியிருந்தார். ஏற்கெனவே இந்த தொகுதியிலிருந்து இரண்டு முறை இவர் எம்பியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் இது மூன்றாவது முறை. தற்போது இவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார்.
இக்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பி டாக்டர். சந்திர சேகர் பெம்மசானி. இவர் குண்டூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக உள்ளார்.
இப்படி இருக்கையில் மூன்றாவது நபரை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து, முக்கிய பொறுப்புக்கு பாஜக தேர்வு செய்திருக்கிறது. என்னதான் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சாதாரண கூட்டணி கட்சிக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தாலும், துணை முதல்வராக இருக்கும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறார். ஒருவேளை பவன் கல்யாணை வைத்து, தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறதோ? அதற்காகத்தான் இந்த ஆளுநர் பதவியோ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications