தேசியக் கொடியின் 75ம் ஆண்டுக் கொண்டாட்டம்.. நேதாஜி உருவப்படத்துடன் ரூ. 75 நாணயம் வெளியிட திட்டம்

நேதாஜி படத்துடன் ரூ. 75 நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தாண்டிற்கான சிறந்த சொல் | ரூ. 75 நாணயம் வெளியிட திட்டம் | அசரடித்த ஏர் ஹோஸ்டஸ்- வீடியோ

    டெல்லி: தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

    இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முதலாக ஏற்றினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்த நிகழ்வு நடைபெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.

    new rs 75 coin coming soon

    இந்நிலையில், தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸ் படம் பொறிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த 75 ரூபாய் நாணயமானது, 35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.

    மேலும், இந்த நாணயத்தில் First Flag Hoisting Day என்ற வாசகம் ஆங்கிலத்திலும் தேவநாகரி மொழியிலும் பொறிக்கப்படும் எனத் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+