Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு பிறகும்.. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் 60% இந்தியர்கள்! ஷாக் சர்வே முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் திருமணமான இளைஞர்களில் சுமார் 60% பேர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவது சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

நமது நாட்டில் குடும்ப முறை என்பது ரொம்பவே பாரம்பரியமான ஒன்றாக இருந்துள்ளது. இங்கே ஒரு ஆண் ஒரு பெண் உடன் இணைந்து வாழ்வதே குடும்பமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலை விரைவில் மாற உள்ளதைப் போலத் தான் தெரிகிறது.

New Survey shows that 60 married Indians are looking to swing and date out of marriage

இது குறித்து டேட்டிங் செயலியான க்ளீடன் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள திருமணமான ஆண்களும் கூட மற்ற பெண்கள் மீது ஆசைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு: க்ளீடன் என்ற இந்த நிறுவனம் இந்தியாவில் திருமணம், திருமணத்திற்குப் புறம்பான உறவு மற்றும் கலாச்சாரம் குறித்து இந்தியாவில் மாறிவரும் அணுகுமுறைகள் குறித்து க்ளீடன் ஒரு ஆய்வை நடத்தியது. முக்கிய மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் வசிக்கும் 25 முதல் 50 வயதான 1,503 திருமணமான இந்தியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

Marriage VS Wedding.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா? இவ்ளோ நாள் இதுகூட தெரியாம போச்சே


60% இந்தியர்கள்: அதில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் "ஸ்விங்கிங்" போன்ற டேட்டிங் முறையை ஏற்றுக் கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது திருமணமான நபர் அல்லது திருமணமாகாத நபர் என யாராக இருந்தாலும் சில காலம் உடலுறவுக்காக மட்டும் ஒன்றாக இருப்பதே "ஸ்விங்கிங்" முறையாகும். இதுவரை இந்தியாவில் எந்தவொரு உறவிலும் காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இது இருக்கிறது.

New Survey shows that 60 married Indians are looking to swing and date out of marriage

நாம் ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருமணமான ஒருவர் மற்றொருவருடன் உடலுறவு கொள்வது மட்டும் துரோகம் இல்லை. திருமணத்திற்குப் பிறகு வேறு ஒருவருடன் எமோஷ்னலாக அதாவது மன ரீதியாக நல்லுறவு இருந்தால் அதுவும் துரோகம் தான். இந்தியாவில் திருமணத்திற்கு பிறகும் சுமார் 46% ஆண்கள் இதுபோல இருக்கிறார்களாம். அதில் கொல்கத்தாவில் தான் அதிகமாக இருக்கிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைனில் மற்றவர்களுடன் flirt செய்து பேசுவது என்பதும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது சுமார் 36 சதவீத பெண்களும், 35 சதவீத ஆண்களும் இதுபோல செய்கிறார்களாம். கொச்சியில் தான் அது அதிகம் இருக்கிறது.

புது சர்வே: தங்கள் பாட்னரை தவிர வேறு ஒருவருடன் இருப்பது போலக் கனவு காண்பது குறித்தும் சர்வே நடத்தப்பட்டது. இது உங்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், இதையும் ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கிறார்கள். இந்த சர்வேயில் 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் இதுபோல கனவு காண்பதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜெய்ப்பூர் 28 சதவிகிதம் மற்றும் லூதியானாவில் 37 சதவிகிதமாக இது இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் இருப்பதே எப்போதும் கன்னியமிக்க உறவாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் அந்த நிலை மாறி வருவதையே இந்த ஆய்வு காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே உறவுகள் எப்படி உருவாகிறது.. அதை எப்படி இந்தியர்கள் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+