அடுத்த கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆனால் அனைவருக்கும் இலவசம் இல்லை
டெல்லி: அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்த முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே இலவசமாக தடுப்பூசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 16ஆம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

50 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி
இந்நிலையில், அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதியவர்கள் தங்கள் வாக்களிக்கும் மாநிலங்கள் அல்லாமல் விரும்பும் மாநிலங்களில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.

இலவசம் இல்லை
இந்தப் பிரிவு இரண்டு வகையாகப் பிரிக்கப்படுவதாகவும் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாரெல்லாம் தடுப்பூசியை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற தகவலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் மற்றவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோ-வின் செயலி
கோ-வின் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அந்தச் செயலியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவற்றில் இந்த தகவல்கள் சரி பார்க்கப்படும். அதன் பின்னரே அவர்களால் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும்.

மத்திய அரசு அறிவுறுத்தல்
அடுத்தகட்டமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால், அவற்றைப் பத்திரமாக வைக்கப் புதிதாக 60 சேமிப்பு இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களிலிருந்து நாட்டிலுள்ள எந்தப் பகுதிக்கும் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல முடியும். மேலும், அதிக நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என்பதால் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications