தூக்கு தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் நிர்பயா கொலை குற்றவாளிகள் மூவர் முறையீடு!
டெல்லி: தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் மூன்று பேர் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 4 பேரும் சட்டத்தில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் இடைவிடாது பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை பெற்று வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவது என ஒரு சுழற்சியான போக்கை நிர்பயா கொலை குற்றவாளிகள் பின்பற்றுகின்றனர். இதனால் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது வரும் 20-ந் தேதி நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தங்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகள் அக்ஷய், பவண் மற்றும் வினய் ஆகியோர் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் 20-ந் தேதியும் இவர்களது தூக்கு தண்டனை நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நிர்பயா கொலை குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியிருப்பது பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications