5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வில் ஆல் பாஸ் முறை ரத்து! மத்திய அரசு முடிவு
டெல்லி: இனி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை கிடையாது என்றும், இந்த முறை ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. கற்றல் திறனை மேம்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் கமார் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக 2 மாதங்களில் துணை தேர்வு நடத்தப்படும். இதிலும் தோல்வியடைந்தால் மட்டுமே மாணவர்கள் அதே வகுப்பில் தொடர்வார்கள் என்று மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதியக் கல்விக்கொள்கையில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இருப்பினும் இதனை அமல்படுத்தும் விதமாக தற்போது 5,8ம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது என கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?: மத்திய அரசின் உத்தரவு குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 என்கிற சட்டத்தின் சிறப்பு அம்சமே, குழந்தைகள் கல்வியை பார்த்து பயப்பட கூடாது என்பதுதான். எனவேதான் இந்த சட்டத்தில் 8ம் வகுப்பு வரை வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வுகள் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஏதோ மேம்போக்கானதாக கொண்டுவரப்படவில்லை.
ஆய்வுகள்: உலகம் முழுவதும் உள்ள கல்வி முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆசிரியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதில், எந்தெந்த மாணவர்கள் கற்றலில் பின்தங்குகிறார்களோ, அவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சிகளை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும். இது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம்.
சட்ட திருத்தம்: சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கல்வி கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி/தோல்வியை நிர்மாணிக்கும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதனை அந்தந்த மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி சொல்லிவிட்டு, இப்போது வந்து 5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது, தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை கை வைக்கும் நடைமுறையாகும். மாநிலங்கள் மீது மத்திய அரசு தனது முடிவுகளை திணிக்கிறது.
மாநில அரசு: இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், நாடு முழுவதும் பெரும் பகுதியான பள்ளிகளை மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. அப்படி இருக்கும் போது தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். இதில் மத்திய அரசு தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.
இவருடைய கருத்துக்களையே பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் பிரதிபலித்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications