பரபரப்பு தீர்ப்பு.. தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
தடுப்பூசி கட்டாயமாக்கப்பட கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
டெல்லி: கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் அதிகமாகிவிட்டது.. எனவே, தடுப்பூசி விஷயத்தில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தின.
குறிப்பாக, கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது... இதுவரை 189 கோடியே 23 லட்சத்திற்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தடுப்பூசி
இதனிடையே, கொரோனா தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்த பல்வேறு மாநில அரசின் அரசாணைகள் வெளியிட்டன... அதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று கூறி, பல்வேறு மாநில அரசுகள் அந்த அரசாணைகளை வெளியிட்டு இருந்தன. இப்படி மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சுப்ரீம்கோர்ட்
இந்த உத்தரவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த மனுக்கள் மீதான விசாரணையும்சுப்ரீம் கோர்ட்டில் இத்தனை நாட்களும் நடந்து வந்த நிலையில், இன்று விசாரணைக்கு மீண்டும் வந்தது... வழக்கை விசாரித்த நீதிபதிகள் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளனர்.

கட்டாயப்படுத்த முடியாது
அவர்கள் கூறியிருப்பதாவது: "எந்தவொரு தனி நபரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது... சில நிபந்தனைகளை உருவாக்கி, அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது.. ஆனால் அதேசமயம், அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ், தடுப்பூசியை செலுத்தி கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

அறிவுறுத்தல்
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அறிவுக்கு ஒவ்வாதது என்று கூறிவிடவும் முடியாது.. எனவே, கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும்... அத்துடன், கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications