Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி டூ குஜராத் வரை.. ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக சொன்ன மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்க குத்தகைளை வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதியில்லை என்றும், டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரும் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாக ஆரவல்லி மலைகள் உள்ளன குஜராத், ஹரியானா, டெல்லி வரை பரவியிருக்கும் ஆரவல்லி மலைத்தொடர் குறித்து அண்மையில், மத்திய அமைச்சகம் அமைத்த குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

Aravalli Range

ஆரவல்லி மலைத் தொடர்

அதில், நிலப்பரப்பிலிருந்து குறைந்தது 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என்றனர்.

இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆரவல்லி மலை தொடர் என்பது இயல்பாகவே உயரம் குறைவானது. எனவே, உயரத்தின் அடிப்படையில் அதை வரையறை செய்வது தவறானது எனவும், இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழி ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கண்டித்து இருந்தனர்.

சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை

இந்த நிலையில்தான், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் எந்த ஒரு புதிய சுரங்க குத்தகைகளையும் வழங்க மாநில அரசுகளுக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளது.

டெல்லி முதல் குஜராத் வரை

டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் அரசு பாதுகாக்கும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 'ஆரவல்லி மலை' என்பதற்கான புதிய வரையறையை நீதிமன்றம் அங்கீகரித்ததே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஹேஸ்டேக் போட்டு சமூக ஆர்வலர்கள் குரல்

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆரவல்லி மலைகளை இப்படிக் குறுகிய முறையில் வரையறுப்பது, சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கூறியிருந்தனர். Save Aravalli என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தனர். டெல்லி, ஹரியானாவில் போராட்டமும் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+