டெல்லி டூ குஜராத் வரை.. ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக சொன்ன மத்திய அரசு
டெல்லி: ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்க குத்தகைளை வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதியில்லை என்றும், டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரும் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாக ஆரவல்லி மலைகள் உள்ளன குஜராத், ஹரியானா, டெல்லி வரை பரவியிருக்கும் ஆரவல்லி மலைத்தொடர் குறித்து அண்மையில், மத்திய அமைச்சகம் அமைத்த குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

ஆரவல்லி மலைத் தொடர்
அதில், நிலப்பரப்பிலிருந்து குறைந்தது 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என்றனர்.
இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆரவல்லி மலை தொடர் என்பது இயல்பாகவே உயரம் குறைவானது. எனவே, உயரத்தின் அடிப்படையில் அதை வரையறை செய்வது தவறானது எனவும், இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழி ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கண்டித்து இருந்தனர்.
சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை
இந்த நிலையில்தான், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் எந்த ஒரு புதிய சுரங்க குத்தகைகளையும் வழங்க மாநில அரசுகளுக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளது.
டெல்லி முதல் குஜராத் வரை
டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் அரசு பாதுகாக்கும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 'ஆரவல்லி மலை' என்பதற்கான புதிய வரையறையை நீதிமன்றம் அங்கீகரித்ததே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஹேஸ்டேக் போட்டு சமூக ஆர்வலர்கள் குரல்
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆரவல்லி மலைகளை இப்படிக் குறுகிய முறையில் வரையறுப்பது, சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கூறியிருந்தனர். Save Aravalli என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தனர். டெல்லி, ஹரியானாவில் போராட்டமும் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications