பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா
டெல்லி: பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருப்பதாக முதன் முறையாக சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் சீனா, இந்தியா, பூட்டான் இடையேயான உறவில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிமிக்க சீனா முயற்சித்தது. இதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இம்மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனால் இந்திய- சீனா உறவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. லடாக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
இதனிடையே பூட்டான், அருணாசல பிரதேசங்களிலும் சீனா குடைச்சல் கொடுக்க தொடங்கியது. தற்போது பூட்டானுடன் தங்களுக்கு எல்லை பிரச்சனை இருக்கிறது என பகிரங்கமாக பிள்ளையார் சுழி போட்டு சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது.

பூட்டானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா கடும் முயற்சித்தது. ஆனால் பூட்டானின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் இந்திய ராணுவம் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் என்பது பூட்டானுக்கான எல்லை பகுதி மட்டும் அல்ல.
டோக்லாமை சீனா கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இந்திய பெருநிலப்பரப்புடன் இணைக்கக் கூடிய இணைப்பை எளிதில் அந்த நாட்டால் துண்டித்துவிட முடியும். ஆகையால்தான் இந்தியாவைப் பொறுத்தவரை டோக்லாம் மிகவும் கேந்திர முக்கியமான பகுதியாக பார்க்கிறது. இந்த நிலையில் சீனா, பூட்டானிலும் எல்லை பிரச்சனையை தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications