பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா
டெல்லி: பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருப்பதாக முதன் முறையாக சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் சீனா, இந்தியா, பூட்டான் இடையேயான உறவில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிமிக்க சீனா முயற்சித்தது. இதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இம்மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனால் இந்திய- சீனா உறவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. லடாக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
இதனிடையே பூட்டான், அருணாசல பிரதேசங்களிலும் சீனா குடைச்சல் கொடுக்க தொடங்கியது. தற்போது பூட்டானுடன் தங்களுக்கு எல்லை பிரச்சனை இருக்கிறது என பகிரங்கமாக பிள்ளையார் சுழி போட்டு சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது.

பூட்டானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா கடும் முயற்சித்தது. ஆனால் பூட்டானின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் இந்திய ராணுவம் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் என்பது பூட்டானுக்கான எல்லை பகுதி மட்டும் அல்ல.
டோக்லாமை சீனா கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இந்திய பெருநிலப்பரப்புடன் இணைக்கக் கூடிய இணைப்பை எளிதில் அந்த நாட்டால் துண்டித்துவிட முடியும். ஆகையால்தான் இந்தியாவைப் பொறுத்தவரை டோக்லாம் மிகவும் கேந்திர முக்கியமான பகுதியாக பார்க்கிறது. இந்த நிலையில் சீனா, பூட்டானிலும் எல்லை பிரச்சனையை தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications