வசமாக சிக்கிய யுவராஜ் - ரெய்னா - ஹர்பஜன்? ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் ED விசாரணை
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்தவர் ஹர்பஜன் சிங். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக சாதித்தவர் யுவராஜ் சிங். மேலும் சுரேஷ் ரெய்னாவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பார்ட்டைம் சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார்.

இவர்கள் 3 பேரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். லெஜன்ட்ஸ் கிரிக்கெட் மற்றும் வர்ணனையாளர்களாக அவ்வப்போது பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் 2 பேரையும் அமலாக்கத்துறை பிடித்து விசாரணை நடத்தி உள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோட் செய்த புகாரில் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் சோனு சூட் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications