கெஜ்ரிவால் தொகுதியில் மட்டும் 1.14 லட்சம் சிசிடிவி கேமராக்கள்.. வாக்குறுதியை நிறைவேற்ற துரித பணிகள்
டெல்லி: சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, தலைநகர் டெல்லி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை ஆம் ஆத்மி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தது ஆம் ஆத்மி.

ஊழலை எதிர்க்கும் கட்சி என்ற பெரிய பிம்பத்துடன் களமிறங்கியதால், சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். கெஜ்ரிவால் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் உருண்டோடி விட்டது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சிசிடிவி கேமராவின் கட்டுப்பாட்டில் டெல்லி நகரம் கொண்டு வரப்படும், என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி தோல்வியுற்றது. இதில் 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி. இதனால் அக்கட்சி தலைமை அதிர்ச்சியடைந்தது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என அஞ்சுகிறது ஆம் ஆத்மி.
இதனையடுத்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது கெஜ்ரிவால் அரசு அக்கறை காட்டி வருகிறது.
டெல்லி நகர் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக முதல்வர் கெஜ்ரிவாலின் புதுடெல்லி தொகுதியில் மட்டும், சுமார் 1.14 லட்சம் சிசிடிவி கேமாக்கள் பொருத்தும் பணி கடந்த வாரம் துவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தற்போது விரைந்து செய்வதாக கூறியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளது ஆம் ஆத்மி.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி, தனது தொகுதியில் ஜூன் 15 முதல் கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கி நடைபெற உள்ளது என்றார். தனிநபர்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உரியவர்களின் ஒப்புதலை பெற்று, கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சிசிடிவி கேமராக்களுக்கு தேவையான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மின் கட்டணத்திற்கு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications