மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது என விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26-ந் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட் அந்நாட்டின் உட்பகுதிகளில் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலின் போது விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ரக ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதலால் விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது.
நமது ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா கூறியதாவது:
பிப்ரவரி 27-ந் தேதி மிக் 17 ரக ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது. இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்டன.
இதில் தவறு செய்த 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகப் பெரிய தவறு. இதுபோன்ற தவறுகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் இருப்போம்.
நமது பகுதிக்குள் பாகிஸ்தானின் குட்டி விமானங்கள் ஆயுதங்களை வீசி செல்கின்றன. இது வான்பரப்பு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாகும். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.
எல்லையில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்ந்தால் பால்கோட் போன்ற தாக்குதல்கள் குறித்து அரசு முடிவு எடுத்தால் அதனடிப்படையில் நாம் செயல்படுவோம். இவ்வாறு ஆர்.கே.சிங் பகதூரியா கூறினார்.
-
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications