Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மேட்டர்.. முக்கிய துறைகளை நிர்வகிக்க இப்படி ஒரு ‘எக்ஸ்பர்ட்’ எதற்கு? சரமாரியாக விளாசிய ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முக்கியமான அமைச்சகங்களை நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர் எதற்கு? என்று ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த கோர ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், அப்படியான எந்த நிகழ்வும் நடக்கவில்லை.

P Chidambarams dig at Railway and IT minister Ashwini vaishnaw

இந்நிலையில், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களின் மொபைல் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், 3 விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அஸ்வினி வைஷ்ணவ் தனது அமைச்சகங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாவதைப் பார்த்து நான் திகைக்கிறேன்.

முதலில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து எனும் சோகம். இந்த விவகாரத்தில், அமைச்சரோ அல்லது அவரது அதிகாரிகளோ டிசம்பர் 2022-ல் சமர்ப்பிக்கப்பட்ட CAG அறிக்கையையும், பிப்ரவரி 2023-ல் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளரால் எழுதப்பட்ட கடிதத்தையும் படிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசி விவரங்களைப் பதிவேற்றும் CoWin தளத்தில் இருந்து பெருமளவிலான டேட்டா கசிந்த நிலையில், லட்சக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியது உண்மையல்ல என்பது அம்பலமானது.

அடுத்ததாக, ட்விட்டர் கணக்குகளைத் தடுக்க அல்லது நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதும், வருமான வரித்துறையைக் கட்டவிழ்த்துவிட்டு ட்விட்டர் நிறுவன ஊழியர்களைக் கைது செய்வதற்கான அச்சுறுத்தல்களை விடுத்ததும், விசாரணை அமைப்புகள் சுதந்திரமானவை என்ற கூற்றை பொய்ப்பித்தது.

இந்த முக்கியமான அமைச்சகங்களை நடத்துவதற்கும், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த சோ-கால்டு'நிபுணர்கள்' தான் தேவையா?" என கேள்வி எழுப்பி உள்ளார் ப.சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+