சிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார்! சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்!!
டெல்லி: திஹார் சிறையில் நாற்காலிகளை வேண்டும் என்றே அகற்றிவிட்டனர்; இதனால் முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். இதற்கு, நாற்காலி விவகாரம் ஒரு சின்ன விஷயம்.. இதை உணர்ச்சிப்பூர்வமானதாக்காதீங்க என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் போது, சிறையில் என்னுடைய அறைக்கு வெளியே நாற்காலிகள் இருந்தன. நான் அதை பகல் நேரங்களில் பயன்படுத்தி வந்தேன். ஆனால் தற்போது அந்த நாற்காலிகள் அகற்றப்பட்டுள்ளன. நான் பயன்படுத்திய ஒரே காரணத்தால் அவை அகற்றப்பட்டுள்ளன.
திஹார் சிறை வார்டனும் கூட நாற்காலி இல்லாமல்தான் இருக்கிறார். நாற்காலி இல்லாததால் முதுகுவலி ஏற்பட்டுள்ளது என ப.சிதம்பரம் புகார் தெரிவித்தார். மேலும் 3 நாட்களுக்கு முன்னர் நாற்காலிகள் அங்கு இருந்தன. தற்போது நாற்காலியும் தலையணையும் சிதம்பரத்துக்கு கொடுக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
இதற்கு பதில் கொடுத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது ஒரு சின்ன விவகாரம். இதை உணர்ச்சிப்பூர்வமானதாக்க வேண்டியதில்லை. சிதம்பரம் அறையில் தொடக்கம் முதலே எந்த நாற்காலியுமே இருந்தது இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்துக்கு தலையணை கொடுப்பது குறித்து சிறை அதிகாரிகள் பரிசீலித்து முடிவு செய்யலாம் என நீதிபதி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications